Top 100 social media profile creation websites

This summary is not available. Please click here to view the post.

Social Media Editor Job

https://msksiva.wordpress.com

Nation Media Group Social Media Editor Job in Kenya




The Nation Media Group, the largest independent media house in East and Central Africa with operations in print, broadcast and digital media and which attracts and serves unparalleled audiences in Kenya, Uganda, Tanzania and Rwanda is seeking to recruit an experienced and self-motivated individual for the following position in editorial department.
Social Media Editor
Ref: HR-SME-06-2012
This is an exciting new position that will blaze a trail for new journalism at Nation Media Group. 
The NMG Social Media Editor will recognise that the new consumer of news and information does not merely want to be served the end product, but would rather participate in producing it. 
Specifically, s/he will:
  • Track comments about NMG’s journalism on blogs, websites, and social media, for trends, ideas and issues of importance, and to translate these into stories and draw insights to guide editors;
  • Set up and coordinate NMG journalism on social media. This will involve a combination of content drawn from newspapers, websites, and require a promotion of stories that pose questions/debate, teaser for blogs, videos, photos;
  • Drive user engagement including responding to public comments if necessary, in consultation with the Managing Editors and the Editorial Director;
  • Create internal social media awareness within the newsrooms;
  • To lead a team social media moderators in securing and sustaining a credible voice for  NMG’s social media accounts. 
This includes corrections and clarifications to any NMG stories that are in dispute are issued in a timely fashion online.
We are looking for a dynamic and well informed citizen to take this challenge. 
We think that the ideal candidate is likely to have university education, prefer good journalism and be keen on having fun while at it. 
NMG is an equal opportunity employer and minorities are particularly encouraged to apply.

This position offers an excellent career growth opportunity and a competitive remuneration package. 
If you meet the above criteria, apply online at http://careers.nationmedia.com before 15th June, 2012.
Only shortlisted applicants shall be contacted.


twitter


I don't get why people keep saying that Aamir is doing it only for 3 crores.Wouldn't he get 3 crore even if hosts a dance show for our pets?

Suresh Subramanian

Thanks... Please read my tamil kavithaigal in www.rishvan.com and leave your comments. Thanks.

reg
Suresh
Suresh Subramanian's Blog Post: காதல் துளிகள்...(17)

health tips


ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான்
மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது
பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில்
வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம்
சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள்
சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான்
அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை
சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால்,
அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன்
ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு
தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை
வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின்
பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது )
`ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம்
கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு
(அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே
தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு
சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர்
பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு,
சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் ,
சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும்.
கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர்
வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள்
உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக
அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும்
முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல்
உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும்
சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு
டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை
தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு
மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம்
உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை
உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும்
2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம்
என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள்
மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே
இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்.

General knowledge health

POMEGRANATE: A NATURAL PHARMACY IN A SINGLE FRUIT
1.The fruit and juice are bursting with the most powerful antioxidants of any other fruit or juice!
2. The fruit and juice could lower your high blood pressure and cholesterol levels!
This fruit is safe and healthy for your heart!
3. The fruit and its juice may prevent a stroke!
4. It shines light into the darkness of Alzheimer’s disease!
5. It's natural sugars could also be something sweet and safe for diabeties!
· ·

grt story of ITian


சாப்ட்வேர் கம்பனிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்:
Microsoft Word வாங்கறதுக்கு ,பொள்ளாச்சி சந்தைல மாடு வாங்குற மாதிரி client கிட்ட பேரம் பேசி வாங்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே.....

நாலு பேர் வேல செய்யற ப்ரோஜெக்டுக்கு, டீம் lead, Team manager, Module lead, Project lead, Project Manager, Delivery Manager, HR, இப்படி ஏழு lead கள போட்டுட்டு, Cost cutting பண்றன்னு toilet tissue paper sizea குறைக்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே ....

10 மாசத்துல ப்ராஜெக்ட் டெலிவரி பண்றன்னு சொல்லிட்டு, 3,4 வருஷம் ஆனாலும் , ஒரு சிசேரியன் பண்ணாக்கூட டெலிவரி பண்ண முடியாத மாதிரி projecta கற்பழிசிருக்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே....


B.E முடிச்சு ,காம்பசில் வேலை வாங்கி ,கழுத்தில் ID கார்டு மாட்டிக்கிட்டு , உழைக்கும் ஒரு resource (உங்கள் பாசையில்) எழுதிக்கொள்வது....




ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை செஞ்சோம் .... ஒரு நாள், recession வந்துருச்சு, இனிமே 9 மணி நேரம் வேலை செய்னு சொன்னீங்க, அதையும் செஞ்சோம் .... Recession முடுஞ்சு அடுத்த recession கூட வர போகுது ஆனால் 8 மணி நேரமா குறைக்கல....

9 மணி நேரம் office ல இருக்கற மாதிரி ID card swipe பண்ணலன்னா சம்பளத்த குறச்சிருவோம்னு 'அங்காடி தெரு அண்ணாச்சி' மாதிறி மெரட்டுநீங்க ....

'அம்மா' கரண்ட் தரமாட்டேங்கறாங்கனு சொல்லி இப்போ AC யையும் 5 மணிக்கு மேல ஆப் பண்ணிடுறீங்க....

அவனவன் parliament லயே porn பாக்குறான், எங்கள ஒரு சினிமா website ஆவது பாக்க விடுறீங்களா?? அதையும் block பண்ணி வெச்சுடறீங்க....

எங்க ஊர்ல ஒரு மளிகை கடைக்காரர், ஒரு நாள் அதிகமா 2000 ருபாய் லாபம் வந்ததுக்காகக கடைல வேல செய்யற employees க்கு quarter வாங்கி தர்றார்....ஆனா,ஒரு Quarter க்கு 2000 கோடி லாபம் சம்பாதிக்கற நீங்க, employees க்கு வாட்டர் packet ஆவது வாங்கி தந்தீங்களா?

ஏன் உனக்கு AC ரூம்ல உக்காரவெச்சு, 20000 ரூபாய் சம்பளம் குடுக்கரோமே பத்தாதா????அப்டின்னு நீங்க கேக்கலாம்....

20000 தர்றீங்க , ஆனா PF, Graduity, welfare fund, Income tax, Professional Tax, Health Insurance, அப்டின்னு எதேதோ சொல்லி, கொஞ்சத்தை புடுங்கிடுறீங்க,

காலேஜ்ல ஒரே ஜீன்ச ஒரு வாரம் போட்டவன புடிச்சு, Weekdaysல Formal shirt, formal shoe, Fridayனா, Casual shirt, Casual Shoe, Client Meetingனா tie, கோட்சூட் , Office Gym போகனும்னா Sport Shoe, T shirt தான் போடணும்னு " டிரஸ் code"னு ஒன்ன உருவாக்கி காசை கரைக்கறீங்க.....
.
அப்பப்ப ஏதாவது escalation மெயில் போட்டு கடுப்பேத்தி சரக்கடிக்க வெச்சு , கொஞ்சம் காச போக வெச்சர்றீங்க....

மிச்ச காச இந்தியன் ஆயில், Hindustan Petroleum, இல்லன்னா Metro Transsport Corporation புடுங்கிடுறான்....


இல்ல நீங்க மிச்ச கம்பெனி மாதிரி,தீபாவளி பொங்கலுக்கு போனஸ் தான் குடுக்கறீங்களா???

பத்து வருஷத்துக்கு முன்னாடி சாப்ட்வேர் இஞ்சினீர்''னு சொன்னா,ஒரு மதிப்பாவது இருந்துது....இப்பல்லாம் 'சாப்ட்வேர் இஞ்சினீர் 'ங்கறது,எதோ 'கம்ப்யூட்டர் சாம்பராணி' மாதிரி casual ஆயிருச்சு ,பொண்ணு கூட தரமாட்டேங்குராணுக .....

சரி, hike குடுப்பீங்கன்னு பாத்தா, company shares value குறையுது , dollar value குறையுது ,யூரோ value குறையுது, பீரோ value குறையுது'ன்னு ஏதாவது காரணத்த சொல்லி 'பருப்பு சட்டிய வழிச்சு நக்கு'ங்கறீங்க .... ஆனா TV நியூஸ்ல வந்து ' இந்த வருஷம் நாங்க 50000 freshersa recruit பண்ண போறோம்னு ' பல்ல இளிச்சுட்டே சொல்றீங்க....

அப்படியே hike னு ஒன்னு கொடுத்தாலும், Appraisal னு ஒரு கான்செப்ட் வெச்சுருக்கீங்க,

ரொம்ப மோசமா வொர்க் பண்ணுனா 'E'
சுமாரா வொர்க் பண்ணுனா 'D'
எல்லா வேலையையும் கரெக்டா செஞ்சா 'C'
150 பெர்சென்ட் வேல செஞ்சா 'B'
200 பெர்சென்ட் வேல செஞ்சா 'A' (அதெப்படி 200 % வேல செய்யறதுன்னு தெரிலப்பா....)

இப்படி 'கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும்'ங்கற அளவு லாஜிக் கூட இல்லாத appraisal processa வெச்சு வர்ற hikeஅயும் கொரச்சறீங்க ....

இவனுங்க படிச்சவனுக, கண்டிப்பா ஒண்ணா சேந்து ஒரு union என்ன, ஒரு ஆனியன் கூட உருவாக்க மாட்டானுக.... strike க்கும் பன்னமாட்டாணுக ங்கற நம்பிக்கைல ஓவரா போய்ட்டு இருக்கீங்க....ஒரு நாள் நாங்க ஒண்ணாசேந்து strike பண்ணத்தான் போறோம் வெள்ளைக்காரன் கம்பிய காச்சி பின்னாடி குத்தப்போறான் , அப்ப தான்யா தெரியும் எங்க அருமை.....

ஏதாவது செய்யணும் சார் ....


Courtesy - http://www.kuttychuvar.com/

ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை

ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு
சுகி.சிவம் கூறும் அறிவுரை

நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மன தைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னை யாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டு மானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சு வதற்கு- உணவு ஊட்டுவதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள்.

நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.

· · · Share · Wednesday

blogs

Famous Blogs

Tamil story


ஒவ்வொரு நாளும் மண்ணை கிளராது அன்று உணவில்லை என்ற நிலையில் வாழும் ஏழை விவசாயிகளின் கடனுக்காக, அவன் பூட்டும் ஏரையும், டிராக்டரையும், ஆடு மாடுகளையும் ஜப்தி செய்யும் இந்த அரசாங்கம், விமான நிறுவனம் நடத்தி அதற்கு 2200 கோடி கடன் வைத்து இப்போது கட்ட இயலாது என்று கையை விரிக்கும் விஜய் மல்லையாவிடம் ஆணிபுடுங்காதது ஏன்? இவ்வளவுக்கும் ஆண்டுதோறும் உலகின் மிகச்சிறந்த அழகிகளை, பல நூறு கோடி செலவு செய்து, ஆடையேதும் இல்லாது படம் பிடித்து காலெண்டர் போடும் பந்தா என்ன? தன் சொந்த F1 கார் ரேசை காலையில் இத்தாலியில் பார்த்துவிட்டு மாலையே பெங்களூரில் தன் கிரிக்கெட் அணியின் ஆட்டத்தை பார்க்க பறக்கும் பகட்டென்ன? அவனுக்கு காட்டும் கருணையை உண்ண வழியின்றி தவிக்கும் விவசாயிக்கு காட்ட தயங்குவதேன்? ...ஹிட்லரை போல இப்படி செய்துவிடலாமே! சமூகத்திற்கு பலனற்ற ஏழை, ஊனமுற்றோர், வயோதிகர், விவசாயி எல்லோரையும் ஒழித்துவிட்டு இந்த தேசத்தை மல்லையா போன்ற பெரும் செல்வந்தர்களுக்கான வண்ண மயமான கேளிக்கை விடுதியாகவோ, விபச்சார விடுதியாகவோ மாற்றலாமே? நீங்கள் அனாதையாய்விட்ட காந்தி, புத்தன் போன்றோரின் ஆன்மாக்களும் சீக்கிரம் சாந்தி அடையும்!!!

Save the Children India

Many children in our country do not have identity documents because their births have not been registered. This prevents them from accessing basic services and other entitlements.

Addressinbg this problem, Save the Children is bringing birth registration to remote areas of Vidarbha region of Maharashtra.

Since 2009, we have registered 45,267 children’s birth in Vidarbha with the help of Children’s Groups, Child Protection Committee members, School Management Committee members and Self Help Group members

The Birth Registration certificate will now help these children to access basic services, including immunization, health care and school enrolment at the right age.

BUDDHISM

Jai bheem youths...! I wishing u all happy "Buddha Purnima".I request u all,do't offer idol pray of Buddha but try to follows his words.that's the great fact.here i give about Our Father Dr.Babasaheb Ambedkar's statement. " Why I like BUDDHISM...??? I prefer Buddhism becoz it gives three principles in combination which no other religion does.All other religion are bothering themselves with god & soul & life after death.Buddhism teaches Panna,love,equality.this what man wants for a good & happy life on earth.these three principles of buddhism make their appeal to me" long live Ambedkarism...!

shared by 
https://www.facebook.com/gowthamameena

கேவலமான உண்மைகள்



1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

#உண்மையின் உண்மை...!